காதலியின் பெற்றோர் மீது கத்திக்குத்து
ஆந்திராவின் திருப்பதி மாவட்டம் டக்கிலி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை சில காலமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் காதலியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். நேற்று பெண் வீட்டிற்கு சென்று தகராறு செய்த வாலிபர், இருவரையும் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் பெண்ணின் தந்தை பலத்த காயம் அடைந்து அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :