72 வெளிநாட்டு மதுபாட்டில்களை வைத்திருந்த நபர் கைது.

by Editor / 16-10-2024 04:27:30pm
 72 வெளிநாட்டு மதுபாட்டில்களை வைத்திருந்த நபர் கைது.

மதுரையில் வெளிநாட்டு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெப்பக்குளம் காவல்நிலைய ஆய்வாளர் சுபத்ரா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். 

அப்போது முனிச்சாலை பள்ளிவாசல் அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் கையில் பெரிய பையோடு நின்றிருந்த நபரை சோதனை செய்த போது, அவர் அதே பகுதியை சேர்ந்த 63 வயதான நவநீத கண்ணன் என்பதும், 

அவர் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 29 வகையான 72 வெளிநாட்டு மதுப்பாட்டில்களை வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 1 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 

 

Tags : 72 வெளிநாட்டு மதுபாட்டில்களை வைத்திருந்த நபர் கைது.

Share via