இரண்டு மகன்களையும் தூக்கில் தொங்கவிட்டு தாயும் தற்கொலை.

by Admin / 17-03-2022 11:49:11am
இரண்டு மகன்களையும்  தூக்கில் தொங்கவிட்டு  தாயும் தற்கொலை.

சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் - குறிஞ்சி தமிழ் தம்பதி. இவர்களுக்கு விமல், கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் குறிஞ்சி தமிழுக்கும், அவரது மாமியார் முத்தம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வீட்டின் மேல்தளத்தில் ராஜேஷ் மற்றும் குறிஞ்சி தமிழ் தங்கள் பிள்ளைகளுடன் தனித்து வசித்து வந்துள்ளனர்.
 
இதனிடையே,  ராஜேஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், இரண்டு மகன்களையும்  தூக்கில் தொங்கவிட்ட குறிஞ்சி தமிழ், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவலறிந்து வந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து கணவன் மற்றும் மாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via