பப்பில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள் - 167 பேர் மீது வழக்கு

by Staff / 05-05-2024 02:42:09pm
பப்பில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள் - 167 பேர் மீது வழக்கு

தெலங்கானா மாநிலம் ஹைதராதாத்தில் உள்ள ஒன்பது பப்பில் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு விதிகளை மீறி அநாகரீகமாக நடனம் ஆடிய 35 இளம்பெண்கள் மற்றும்130 இளைஞர்கள் ஆகியோரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிளப்பில் இருந்த 167 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via