அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகனுக்கு எதிராக ஆந்த்ரோபிக் நிறுவனம் வழக்கு
ஆந்த்ரோபிக் நிறுவனத்தை அமெரிக்காவின் விநியோகச் சங்கிலி அபாயம் என அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன், அறிவித்ததற்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தனது கிளாட் ஏ.ஐ தொழில்நுட்பத்தை ராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையாகப் பயன்படுத்த அனுமதி அளிக்க ஆந்த்ரோபிக் மறுத்தது.
இந்த மறுப்பைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து அரசு நிறுவனங்களும் ஆந்த்ரோபிக் சேவைகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். இந்த நிறுவனம் கலிபோர்னியா ஃபெடரல் நீதிமன்றம் மற்றும் வாஷிங்டன் டி.சி. மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளது.இந்தத் தடை தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்றும், இது தங்களது வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பாதிக்கும் என்றும் ஆந்த்ரோபிக் கூறியுள்ளது.
இந்த மோதலில் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு ஆதரவாக ஓபன் ஏஐ மற்றும் கூகுள் போன்ற பிற நிறுவனங்களின் 30-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்
Tags :















.png)


.jpg)
