மகள் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு எடுத்த தாய்

by Staff / 15-06-2024 04:05:31pm
மகள் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு எடுத்த தாய்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராதிகா, மகள் திவ்யா. திவ்யா 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த அவரது தாயார் ராதிகா, நேற்று (ஜூன் 14) தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via