பிறந்த சிலநாட்களில் போதிய சிகிச்சையின்றி இறந்த குழந்தை

by Editor / 03-06-2022 10:07:52pm
பிறந்த சிலநாட்களில் போதிய சிகிச்சையின்றி இறந்த குழந்தை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார். இவர் கடந்த மே 30 அன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹோபா மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, மருத்துவர்கள் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் அந்த குழந்தையை அனுமதித்தனர்.

மேலும் அரசு மருத்துவமனை வார்டில் அழுக்கு மற்றும் எறும்புகள் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குழந்தையின் உறவினர்கள்  போராட்டம் நடத்தினர்.பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை எறும்புக் கடித்து இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினார்.

 

Tags : A baby who dies a few days after birth without adequate treatment

Share via