சாராயம் விற்பவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

by Editor / 05-06-2022 12:43:44pm
சாராயம் விற்பவர்களை கைது செய்ய வலியுறுத்தி  கிராம மக்கள் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் தென்ஓடாச்சேரி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக பன்னீர் மற்றும் சந்திரமோகன் தந்தை மகன் ஆகிய இருவரும் பாண்டிச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை வைப்பூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கானூர் என்கிற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

 

Tags : Villagers block road demanding arrest of liquor sellers

Share via