ஜோ பைடன் ஓய்வு மாளிகை அருகே பறந்த விமானத்தால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுக்கும் கடற்கரை மலைக்கு அருகே சிறிய விமானம் ஒன்று தவறுதலாக பறந்ததால் பாதுகாப்பு கருதி அதிபரும் அவர் குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.ஆனால் ஜோ பைடனுக்கு ஆபத்து ஏதுமில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்த நிலைமை ஆய்வு செய்யப்பட்டதாகவும் அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அந்த விமானம் தவறாக புகுந்து விட்டதை உறுதி செய்த பின்னர் அந்த விமானம் அங்கிருந்து அப்புறப்படுத்த பட்டதாக கூறப்படுகிறது. அந்த விமானத்தின் விமானி இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அவர் விமானத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் ஏன் பொருட்படுத்தவில்லை என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Tags :