உடல்நலக்குறைவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by Editor / 05-06-2022 09:49:36pm
உடல்நலக்குறைவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வடமலைபட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்  இவர் பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு பகுதியில் வசித்துவருகிறார்.தற்போது மணிமுத்தாறு காவலர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக இருந்துவந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் நேற்று இரவு மணிமுத்தாறில் பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு இருசக்கரவாகனத்தில்  வந்துள்ளார்.

இவர் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் அருகே வந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.திடீரென மயங்கி விழுந்து உள்ளார். அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்

பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags : Death without treatment at Sub-Inspector Hospital due to ill health

Share via