இளம்பெண் மீது ஆசிட் வீசிய பெண் உள்பட 2 பேர் கைது

by Editor / 06-06-2022 09:29:13am
 இளம்பெண் மீது ஆசிட் வீசிய பெண் உள்பட 2 பேர் கைது

மதுரவாயல்பகுதியில் வசித்துவருபவர் லேகா இவரது வீட்டின் முகப்பு கதவு  தட்டப்படும்  சத்தம் கேட்டு ஐவரும்,இவரது வயதான தாயும் கதவை திறந்துள்ளார்கள் . அப்போது   வீட்டின் வெளியே ஒரு ஆணுடன் நின்ற பெண் திடீரென கையில் இருந்த  ஆசிட்டை எடுத்து லேகா மீது ஊற்றியுள்ளார். இதில் லேகாவுக்கும், அவர் அருகில் நின்றிருந்த அவரது தாய்க்கும் முகத்தில் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லேகா மீது ஆசிட் வீசிய போரூர் மங்களா நகரை சேர்ந்த ஐஸ்வர்யா (37), தீனதயாளன் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. லேகா, பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவரை கைவிட்டுவிட்டு தீனதயாளன் என்பவரை காதலித்துள்ளார். தற்போது அவருடனான தொடர்பையும் நிறுத்தி விட்டார். இதற்கிடையில் லேகாவின் முன்னாள் காதலன் பார்த்திபனை, ஐஸ்வர்யா காதலித்து வருகிறார். லேகாவின் பிரிவை தாங்க முடியாத முன்னாள் காதலன் தீனதயாளன், அவரை பழிவாங்க திட்டமிட்டு, ஐஸ்வர்யாவுடன் பழகியுள்ளார்.அப்போது லேகா ஐஸ்வர்யாவிடம் இன்னும் உனது காதலன் பார்த்திபனுடன் பழகுவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா, தீனதயாளனை அழைத்துக்கொண்டு லேகா வீட்டுக்கு சென்று கையில் தயாராக வைத்திருந்த ஆசிட்டை வீசியதாக முதல்கட்ட விசாரணையில் லேகா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 

Tags : Two people have been arrested, including a woman who threw acid on a teenager

Share via