அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக ஆலயங்கள் உள்ளது மதுரை ஆதீனம்

by Editor / 06-06-2022 09:15:24am
அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக ஆலயங்கள் உள்ளது  மதுரை ஆதீனம்

மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், பாரதியார் மட்டும் தற்பொழுது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என பாடியிருப்பார், அந்தளவுக்கு மதுக்கடைகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என கூறினார்.

கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்கின்றனர். நாங்கள் ஏன் அரசியல் பேச கூடாது? ஆதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? கோயில் சொத்துக்கள் இங்கே தொலைந்து போகிறது. உண்மையில் தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரமே கோயிலுக்குள்தான் உள்ளது. அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை அரசியல்வாதிகள் கோயிலில் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோயில் நகைகளை உறுக்குவதாக கூட கூறுகிறார்கள். ஆனால் எங்கு உருக்குகிறார்கள் என தெரியவே இல்லை.

மக்கள் இந்து அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள். ஏனென்னால் அந்த பணம் அந்த கோவிலுக்கு செல்வதில்லை. உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது. திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும். கோயில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டுள்ளனர். குத்தகை கேட்டால் குத்துவதற்கு வருகின்றனர். ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள். இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் தான் திராவிட கட்சிகள் பாக்கி வைத்துள்ளது. திராவிடர் என்பதற்கு அர்த்தம் என்ன என சீமான் கேட்ட கேள்விக்கு இது வரை யாரும் பதில் அளிக்கவில்லை.

அறநிலையத்துறை பொல்லாத துறையாக உள்ளது. அறநிலையதுறை அதிகாரிகள் விபூதி பூசுவதில்லை, கோயிலில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. அறநிலையத்துறை கலைத்துவிட வேண்டும், கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும். சாமியார்கள் யாசகம் பெற்று சாப்பிட வேண்டும் என கூறிய சு.வெங்கடேசன் என்னுடன் ஒரு வாரம் தங்கி இருந்தால் சுருண்டு போய் விடுவார். விபூதி பூசுபவர்களாக பிறந்தால் புண்ணியம் கிடைக்கும். இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என சொல்கிறார்கள். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது? என மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.

அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக ஆலயங்கள் உள்ளது  மதுரை ஆதீனம்
 

Tags :

Share via