மர்மக்காய்ச்சல் காரணாமாக அடுத்தடுத்து 2 குழந்தைகள் பலி

by Editor / 08-06-2022 09:14:44am
மர்மக்காய்ச்சல் காரணாமாக அடுத்தடுத்து 2 குழந்தைகள்  பலி

 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி பஞ்சாயத்து காசி நாதபுரத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு குழந்தையும்,இன்று ஒரு குழந்தையுமென 2 குழந்தைகள் இறந்துள்ளது.இதில் சொரிமுத்து என்பவரின்  மகள் பூமிகா வயது: 6 , பழனி என்பவரின் மகள் சுப்ரியா (வயது:8)ஆகிய 2 குழந்தைகள் பலியாகியுள்ளன.  இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.மேலும் மாவட்ட நிர்வாகம் முழுமையானர்  சுகாதாரபணிகளை முடுக்கிவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : 2 children killed in a row due to typhoid fever

Share via