சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் தாய் உயிரிழப்பு மருத்துவமனை ஊழியர்களுடன் உறவினர்கள் கடுமையான வாக்குவாதம்

by Staff / 14-06-2022 10:38:04am
சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் தாய் உயிரிழப்பு மருத்துவமனை ஊழியர்களுடன் உறவினர்கள் கடுமையான வாக்குவாதம்

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த பர்வீன் பானு என்பவர் தனது முதல் பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 11ஆம் தேதி பெண் குழந்தை அவருக்கு பிறந்துள்ளது

இந்த நிலையில் இன்று காலை அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக பர்வீன் பானுவின் உறவினர்கள் செவிலியர்களிடம் தகவல் தெரிவித்தும் ஒரு மணி நேரமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் வந்து பார்க்காத காரணத்தினால் பர்வீன் பானு உயிரிழந்துள்ளார்

இதனையடுத்து பர்வீன் பானுவின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via