மகளுக்குப் பாலியல் தொந்தரவு. பாஜக பிரமுகர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியில் வசிப்பர் 47 வயதான பாரதி. பாஜகவில் எஸ்.சி பிரிவின் நகரத் தலைவராக உள்ளார். இவர் இந்து திருமணச் சட்ட விதியை மீறி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே அடுத்தடுத்து திருமணமங்களை செய்துகொண்டுள்ளார்.
பாரதியின் நான்காவது மனைவிக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையிடம் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனை குழந்தை தனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். தனது கணவரிடம் கேட்டபோது தகராறு செய்துள்ளார்.உடனே அந்தப் பெண்ணின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்த போலீசார் வழக்குப் பதிவுசெய்து பாரதியை கைது செய்தனர்.
Tags :