சிறுமியின் உடலில் தீவைத்து துன்புறுத்திய மந்திரவாதி கைது

by Staff / 03-04-2022 04:33:15pm
சிறுமியின் உடலில் தீவைத்து துன்புறுத்திய மந்திரவாதி கைது

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமிக்கு  உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அதே ஊரில் வசித்து வரும் பேயோட்டும் மந்திரவாதி மௌலானா வாஹித்திடம் அழைத்துச் சென்றுள்ளனர் குடும்பத்தினர். சிறுமியின் உடலில் தீய சக்திகள் புகுந்துள்ளதாக கூறி, தான் பூஜைகள் செய்து அவற்றை விரட்டுவதாக குடும்பத்தை நம்ப வைத்து சிறுமியை தன்னோடு தங்க வைத்துள்ளார்.

அன்று முதல் வாஹித் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். நான்கு நாட்கள் கழித்து குடும்பத்தினர் வந்து சிறுமியை பார்த்தபோது அவளது முகம், உதடுகள் கால்கள் என பல  இடங்களில் தீக்காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சிறுமியும் இயல்பான மனநிலையில் இல்லாமல் புலம்பியபடியே இருந்ததால் காவல்துறையினரிடம் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அம்மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்பத்தினர் புகாரை அடுத்து தற்போது வாஹித் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307  மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்  சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வாஹித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via