அதிக மது குடித்த பெயிண்டர் பலி

by Staff / 23-05-2023 01:21:43pm
 அதிக மது குடித்த பெயிண்டர் பலி

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த சூரியகோடு புதுச்சேரிவிளை வீட்டை சேர்ந்தவர் ராஜ குமார் (வயது 55). ஒர்க் ஷாப்பில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று ராஜ்குமார் அதிக அளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோனசேரி சாலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் ராஜகுமாரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராஜகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லா பாய் அளித்த புகாரின் அடிப்படையில், கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via