நாளைமுதல் 3 நாட்கள் ஜல்லிக்கட்டு திருவிழா..

by Editor / 14-01-2023 09:06:59am
நாளைமுதல் 3 நாட்கள் ஜல்லிக்கட்டு திருவிழா..

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி 15, 16 ,17 ஆகியதேதிகளில் அவனியாபுரம், பாலமேடு. அலங்காநல்லூர், ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளைகளுக்கு ஆன்லைன் பதிவு செய்யப்பட்டு, முன்பதிவு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தற்பொழுது அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி டோக்கன் பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் தங்களது காளைகளை அழைத்துச் செல்ல உள்ள வாகனங்களுக்கான அனுமதி சான்று அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம், தங்களுக்கு கிடைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அனுமதி டோக்கனை சமர்ப்பித்து ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச்செல்லும் வாகன தகுதி சான்றிதழ் பெறுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான சான்றுகளை பெற்றால் தான் ஜல்லிக்கட்டு அன்று இறுதி கட்ட பரிசோதனைக்கு செல்லும் பொழுது இந்த காளைகளை வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க முடியும் என்று மாவட்ட, நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அனுமதி டோக்கன் பெற்றவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம்  டோக்கனை காண்பித்து வாகன தகுதி சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via