பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் இன்று முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்

by Editor / 01-07-2022 12:22:00pm
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் இன்று முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால் இன்று முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மத்திய அரசின் உத்தரவுப்படி அனைவரும் பான் எண் மற்றும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இதற்கு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஜூன் 30ம் தேதிக்குள் இணைப்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய நேரடி வருமான வரித்துறை அறிவித்தது. ஜூலை 1ம் தேதியிலிருந்து இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது. இனியும் இணைக்காவிட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து பான் கார்டு செயலற்றதாக ஆக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அபராதம் இரு மடங்காக உயர்கிறது.

 

Tags :

Share via