சிவகாசிபட்டாசுக் கடை உரிமையாளரிடம்  நகை திருடிய கள்ளக்காதலி உள்ளிட்ட 2 பேர் கைது.

by Staff / 07-10-2025 09:29:53am
சிவகாசிபட்டாசுக் கடை உரிமையாளரிடம்  நகை திருடிய கள்ளக்காதலி உள்ளிட்ட 2 பேர் கைது.

விருதுநகர் மாவட்டம்  சிவகாசியில் பட்டாசுக் கடை வியாபாரியிடம் நகை திருடிய இரு பெண்களை போலீசார்  கைது செய்தனர். நாகராஜ் என்பவருக்கு திருமணமான நிலையில், முருகேஸ்வரி என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. ஞாயிறு இரவு முருகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற நாகராஜ் அங்கு மது அருந்தியுள்ளார். அப்போது உடன் முருகேஸ்வரியின் தோழி கடல்கன்னியும் (34) இருந்துள்ளார். போதையில் உறங்கிய நாகராஜின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றனர். இதனைத்தொடர்ந்து போலீசார் முருகேஸ்வரி, கடல்கன்னி இருவரையும் கைது செய்தனர்.

 

Tags : சிவகாசிபட்டாசுக் கடை உரிமையாளரிடம்  நகை திருடிய கள்ளக்காதலி உள்ளிட்ட 2 பேர் கைது.

Share via
Logo