1330 திருக்குறள்களை ஒப்புவித்த 2 சிறுவர்களுக்குவிருது, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு 

by Editor / 05-08-2021 04:36:29pm
1330 திருக்குறள்களை ஒப்புவித்த 2 சிறுவர்களுக்குவிருது, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு 

 

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் செயலாக, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் இணைந்து நடத்திய விழாவில் ஆ.ஆபிரகாம் ஜோஸ் (வயது 10), 33.08 நிமிடத்திலும், ஆ.அருனிஷ் ஷேண்டோ (வயது 7) 25.47 நிமிடத்திலும் 1330 திருக்குறளை தனித்தனியாக நேரடியாக ஒப்பித்து சாதனை செய்தார்கள்.


அந்த இளம் சிறுவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பாக அதன் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், ‘திருக்குறள் வித்தகர்’ என்ற விருதையும், ரூபாய் ஒரு லட்சத்தையும் அந்த இரண்டு சிறுவர்களுக்கும் பரிசாக அளித்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு அசிஸ்ட் வேர்ல்டு ரெக்காட்ஸ் சாதனைச் சான்றிதழ் மற்றும் விருதினை, தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ப் வாரிய அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் வழங்கி கௌரவித்தார். 

 

Tags :

Share via