70 லட்சம் கேட்டு தொழில் அதிபரை காரில் கடத்திய மர்ம கும்பல்

by Editor / 03-07-2022 01:40:23pm
70 லட்சம் கேட்டு தொழில் அதிபரை காரில் கடத்திய மர்ம கும்பல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை 6 மணி நேரத்தில் போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர் வடக்கு ரத வீதியில் சேர்ந்த தொழிலதிபரான சந்திரசேகர் என்பவர் நேற்று காலை 5 மணி அளவில் நடை பயிற்சியில் ஈடுபட்டபோது 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. இது தொடர்பான மகன் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் போலீசார் செல்போன் எண்கள் மூலம் துப்பு துலங்கி கீரனுறை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில் கடத்தல் கும்பலால் ஓசூர் சாலையில் இறக்கிவிடப்பட்ட சந்திரசேகருக்கு பத்திரமாக மீட்கப்பட்டார்.

 

Tags :

Share via