சீனாவில் இந்திய மாணவா் சடலமாக மீட்பு

by Admin / 03-08-2021 01:02:47pm
சீனாவில் இந்திய மாணவா் சடலமாக மீட்பு



சீனாவில் படித்து வந்த இந்திய மாணவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். அவரின் மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிகாா் மாநிலம் கயை மாவட்டத்தைச் சோந்தவா் அமன் நாக்சென் (20). இவா் சீனாவின் தியான்ஜென் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் வணிக நிா்வாகம் படித்து வந்தாா். அவா் வசித்து வந்த அறையில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி அமன் சடலமாக மீட்கப்பட்டாா். அவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக சீனாவில் படித்து வந்த 23,000 இந்திய மாணவா்கள் நாடு திரும்பியபோதும் அந்நாட்டில் தங்கிய வெகுசில மாணவா்களில் அமன் நாக்செனும் ஒருவா். அவரின் உடலை இந்தியா அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று சீன அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
விசாரணைக்கு வலியுறுத்தப்படும்: அமனின் மா்ம மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பிகாா் தலைநகா் பாட்னாவில் அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

 

Tags :

Share via