அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூரை சேர்ந்த ராஜ்குமார் (41) என்பவர் கச்சிராயிருப்பில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :