புகையிலை பொருட்களை கடத்திய இரண்டு பேர் கைது

by Staff / 25-10-2023 12:42:15pm
 புகையிலை பொருட்களை கடத்திய இரண்டு பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் தங்கபாளையம் அருகே உள்ள நகலூர் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பூரன்சிங் மற்றும் தல்பத்சிங் என்பதும், கர்நாடக மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக மூட்டையில் கடத்தி வந்ததாகவும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 8, 500 பணம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via