பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு

by Staff / 07-10-2022 03:01:50pm
 பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த தேசிங்கு என்பவருடைய 16 வயது மகள்(ராஜேஸ்வரி) மேல்மலையனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்  பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி வீட்டில் இருந்து ராஜேஸ்வரி காணவில்லை என அவரது பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொடுக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பள்ளி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via