குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட மூன்று பேர் கைது.

by Editor / 26-09-2024 08:52:27am
 குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட மூன்று பேர் கைது.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட திம்மபொதியான்வளவு பகுதியைச் சேர்ந்த சேட்டு குண்டுமல்லி தம்பதியினருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் ஏற்கனவே ஐந்து குழந்தை பிறந்துள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தை இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சிகிச்சை அளிக்க சென்றபோது தம்பதியினர் மட்டுமே இருந்ததை கண்டு குழந்தை எங்கே என கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் எடப்பாடி திம்மபொதியான் வளவு பகுதியை சேர்ந்த சேட்டு குண்டுமல்லி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தையை தத்தெடுக்க போவதாகவும் அதற்கு உண்டான வழிவகை குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார் .. அதற்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீ முரளி எடப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பிறந்த குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது.

உடனடியாக குழந்தையின் தந்தை சேட்டு, குழந்தைகள் விற்பனைக்கு தரகர்களாக செயல்பட்ட எடப்பாடி ஆலச்சம்பாளையம் சின்னேரி காடு பகுதியைச் சேர்ந்த முனுசாமி, கவுண்டம்பட்டி செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில் முருகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் தலைமறைவான குண்டுமல்லியை தீவிரமாக தேடி வருகின்றனர்..

 

Tags :  குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட மூன்று பேர் கைது.

Share via