உரிமையை தாருங்கள் : எம்.பி., சு. வெங்கடேசன் பதிவு

by Staff / 08-02-2024 02:40:13pm
உரிமையை தாருங்கள் : எம்.பி., சு. வெங்கடேசன் பதிவு

மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற காந்திசிலை முன்பு தமிழக எம் பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் மதுரை எம்.பி., சு. வெங்கடேசன், மிக்ஜாம் புயலும், பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயம், வேலையிழப்பு, கால்நடைகள் இறப்பு, வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர். ஆனால் மத்திய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. “நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை - எங்களின் உரிமையைத் தாருங்கள்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories