பள்ளிவாசல் குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் மூலம் பரப்பிய நபர் கைது

by Editor / 08-05-2024 12:40:03am
பள்ளிவாசல் குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் மூலம் பரப்பிய நபர் கைது

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் அமைந்துள்ளது  முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.இந்நிலையில் இந்த பள்ளிவாசலின் வரலாறு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களோடு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பள்ளிவாசலின் நிர்வாகம் சார்பில் அசன் மைதீன் என்பவர் தென்காசி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை பதிவிட்டவர் சென்னையை சேர்ந்த   சீனிவாச சுப்ரமணியன்  என்பவர் என்பது கண்டறியப்பட்டது தொடர்ந்து தென்காசி சைபர் கிரைம் போலீசார் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாச சுப்பிரமணியனை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 

Tags : பள்ளிவாசல் குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் மூலம் பரப்பிய நபர் கைது

Share via