போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது.

by Editor / 17-04-2023 08:38:42am
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது.

கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை செயல்பட்டுவந்தது.இந்த சந்தையை இடித்துவிட்டு புதியதாக ரூ.6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் 250 கடைகள் கொண்ட தினசரி சந்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் கடைகளை இடிப்பதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இம்மாதம் 14ந்தேதி வரை கடைகளை காலி செய்ய கால அவகாசம் கொடுத்தது. கால அவகாசம் முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடைகளை இடிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இதற்கு வியாபாரிகள் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு  பழைய கடைகளை  அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via