தோசைக்காக மனைவியை கொலை செய்த கணவன் 

by Editor / 17-04-2023 07:23:43am
தோசைக்காக மனைவியை கொலை செய்த கணவன் 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என். மோட்டூர் மேட்டு கொட்டாயை சேர்ந்தவர் கணேசன் (60) கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (50).சம்பவத்தன்று வீட்டில் கணேசன் தோசை சப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் இனி தோசை சுட்டுத் தர முடியாது என மனைவி கூறியதாக  கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க வந்த மருமகள், குழந்தை ஆகியோரையும் வெட்டியதாக கூறப்படுகிறது.இதனால் 3 பேரும் காயமடைந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மாதம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via