மனைவியை கொலை செய்து காட்டுக்குள் புதைத்த கணவன்
மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராம் பட்டேல். இவருக்கும் இவர் மனைவி சரஸ்வதிக்கும் இடையே வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், தன் மனைவி சரஸ்வதியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ராம் பட்டேல், காட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியை வெட்டிப் புதைத்துள்ளார். சரஸ்வதியைக் காணாத நிலையிலும், காட்டில் ஒரு பெண்னை புதைத்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்த காவல்துறையினர், ராம் பட்டேலை கைது செய்த விசாரித்தனர். அதில், தன் மனைவி சரஸ்வதியை கோடாரியால் வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
Tags :