அ.தி.மு.க வின் பொதுக்குழு -தடை விதிக்க கோரிய மனு நாளை விசாரணை

by Admin / 06-07-2022 09:15:04pm
அ.தி.மு.க வின் பொதுக்குழு -தடை விதிக்க கோரிய மனு   நாளை   விசாரணை

அ.தி.மு.க வின் பொதுக்குழு வரும் 11ஆம் தேதி  நடைபெற உள்ளநிலையில் ,அதற்கு தடை விதிக்க கோரி  ஒ.பன்னீர்செல்வம் தரப்பில்  தாக்கல்  செய்யப்பட்ட  மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம் இன்று மாலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக இருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி  தரப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு தடை விதிக்காதிருக்க மனு செய்திருந்தது .அதன் விசாரணையும்  இன்று வந்தது   பொதுக்குழுவுக்கு  தடை இல்லை  என்று
தீர்ப்பு  வந்ததாகச்சொல்லப்பட்ட  நிலையில்,  சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி  கிருஷ்ணன் பாரதி இவ்வழக்கு  நாளை   நடைபெறும் என்றும்  உச்ச நீதி மன்றம் வழங்கிய  தீர்ப்பு வெளியான பின்னரே இவ்வழக்கு   விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக  அறிவித்தார்.

 

Tags :

Share via