செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நான்கு மாவட்டங்களுக்கு உள்ளுர் விடுமுறை

by Admin / 24-07-2022 02:24:45pm
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நான்கு மாவட்டங்களுக்கு உள்ளுர் விடுமுறை
செஸ் ஒலிம்பியாட்  தொடக்க விழா காரணமாக சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளுர்,காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வரும்  28 ஆம் தேதி  உள்ளுர்  விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரத்தில்  வரும் 28 -ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது இந்நிகழ்வின் தொடக்க  விழா  நேரு  உள்  விளையாட்டரங்கில்  முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து  கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இதன்  காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு  உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via