சேலத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி கைது
அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த மற்றொரு பயங்கரவாதி பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் கூறி கர்நாடக மாநில நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அத்தர் உசைன் என்பவனை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து தகவல் தெரிவித்த நிலையில் சேலத்தில் தனியார் நிறுவனத்தின் தங்கி வேலை பார்த்து வந்த அப்துல் அலி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஈரோட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாணிக்கம் பாளையம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பத்தினர் ஐந்து பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
Tags :