ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் சனிக்கிழமை நடந்தது. ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் கீழே இறங்க முயன்றார். முதலில் தன் பையை நடைமேடையில் வீசினார். பின்னர் அவர் தனது குழந்தையுடன் ரயிலில் இருந்து குதித்தார். அப்போது, நடைமேடையில் இருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டு உடனே ஓடிப்போய் கீழே விழுந்தவர்களை மீட்டனர். தாயையும், குழந்தையும் நூழிலையில் காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :