பயங்கர விபத்து.. தம்பதி பலி

by Staff / 06-03-2023 03:26:50pm
பயங்கர விபத்து.. தம்பதி பலி

உத்தப்பிரதேச மாநிலத்தில் கரும்பு டிராக்டர் ஏறியதில் தம்பதியினர் உயிரிழந்தனர். பிலிபித் மாவட்டத்தில் கணவன், மனைவி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​அதிக பாரம் ஏற்றி வந்த டிராக்டர் அவர்கள் மீது அதிவேகமாக மோதியது. தொடர்ந்து, டிராக்டர் டயர்களுக்கு அடியில் தம்பதியினர் விழுந்தனர். இந்த சம்பவத்தில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய கணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via