வெள்ளி நாணயங்களை எடுத்துச்சென்ற மக்கள்

by Staff / 06-03-2023 03:45:52pm
வெள்ளி நாணயங்களை எடுத்துச்சென்ற மக்கள்

மேற்கு வங்காளத்தின் பிண்டோலில் சாலையோர பள்ளம் தோண்டும்போது 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த வெள்ளி நாணயங்களின் புதையல் தொழிலாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல் பரவியதும், அப்பகுதி மக்கள் நாணயங்களை எடுக்க விரைந்து வந்தனர். ஆனால், போலீசார் வந்து பார்த்தபோது மூன்று காசுகள் மட்டுமே மீட்கப்பட்டன. இந்த நாணயங்களின் மதிப்பை மதிப்பிடுவதற்காக இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பப்படவுள்ளன. மேலும் பொதுமக்கள் எடுத்துச் சென்ற நாணயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள்  தெரிவித்தனர். புதையல் கிடைத்துள்ளதாக வந்த தகவலால் அப்பகுதி மக்கள் கட்டுக்கடங்காமல் திரண்டனர்.

 

Tags :

Share via