தங்கும் விடுதியில் விபச்சாரம் - பணியாளர் கைது

by Staff / 06-03-2023 04:47:41pm
தங்கும் விடுதியில் விபச்சாரம் - பணியாளர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள சில தங்கும் விடுதிகளில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு அவர், போலீசாருடன் தங்கும் விடுதிகளில் திடீரென சோதனை செய்தார். அப்போது சமயபுரம் புதுத்தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக அந்த தங்கும் விடுதி பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via