போலிசை மிரட்டிய பெண் வழக்கறிஞர்-  மகள் மீது 7 பிரிவுகளில் வழக்கு 

by Editor / 07-06-2021 04:07:58pm
 போலிசை மிரட்டிய பெண் வழக்கறிஞர்-  மகள் மீது 7 பிரிவுகளில் வழக்கு 



சென்னை காவல்துறையினரை கெட்ட வார்த்தைகளால் திட்டிய பெண் வழக்கறிஞர் மீது 7 பிரிவுகளில் வழக்கு 3 பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கையில் அவரது மகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் முகக் கவசம் அணியாமல் காரில் சென்ற பிரீத்தி என்ற பெண்ணை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதையறிந்த அந்த பெண்ணின் தாயார் தனுஜா கத்துலா, மற்றொரு சொகுசு காரில் சம்பவ இடத்திற்கு வந்து, காவல்துறையினரை கடுமையாக பேசினார்.தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்மணி, முகக் கவசம் அணிய முடியாது, அபராதம் கட்ட இயலாது எனக் கூறி காவல்துறையினரை ஒருமையில் பேசியுள்ளார்.
இந்நிலையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, பொது இடங்களில் அசிங்கமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்று நோய் பரவல் சட்டம், அரசு உத்தரவை மீறி செயல்படுதல், தொற்று நோய் பரப்பக்கூடிய தீய எண்ணத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்நிலையில், ஊரடங்கை மீறி வெளியே வந்ததாக அவரது மகளான பிரீத்தி ராஜனின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.

 

Tags :

Share via