பரோட்டா தொண்டையில் சிக்கி தொழிலாளியின் உயிரிழப்பு

by Staff / 31-05-2024 12:11:25pm
பரோட்டா தொண்டையில் சிக்கி தொழிலாளியின் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பரோட்டா சாப்பிடும்போது தொண்டையில் சிக்கியதில் கட்டுமானத் தொழிலாளி சாந்தனன் (40) என்பவர் உயிரிழந்தார். சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டதும் தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் கொண்டு வருவதற்குள் சுருண்டு விழுந்து சாந்தனன் மயங்கிக் கிடந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via