நேபாளத்தில் கனமழை.. 20 பேர் பலி

by Staff / 27-06-2024 10:36:36am
நேபாளத்தில் கனமழை.. 20 பேர் பலி

நேபாளத்தில் கனமழை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நிலச்சரிவு மற்றும் மின்னல் காரணமாக 20 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டுவிற்கு மேற்கே 125 கி.மீ. தொலைவில் உள்ள லாமிங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு நாட்களில் மேலும் 9 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via