தேங்காப்பட்டணம் துறைமுகம்: முதல்வரை சந்தித்து எம்.பி, எம்.எல்.எ, ஆயர் கோரிக்கை

by Editor / 27-08-2022 08:29:46pm
தேங்காப்பட்டணம் துறைமுகம்: முதல்வரை சந்தித்து எம்.பி, எம்.எல்.எ, ஆயர் கோரிக்கை

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக துவங்க வேண்டும் என மாண்புமிகு  தமிழக முதல்வர் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோருடன் மேதகு கோட்டார் மறைமாவட்ட ஆயர். நசரேன் சூசை,முதன்மை தந்தை, தூத்தூர் மண்டலம், திருவனந்தபுரம் மறைமாவட்டம் ,பெபின்சன், இயக்குனர், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம், கோட்டாறு மறைமாவட்டம் டனிஸ்டன் , தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் N. ஜார்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் J. ஜோர்தான், கிளீட்டஸ்,  அம்புறோஸ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அப்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட துறைமுக கட்டுமான பணிகள் உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும் என உறுதியளித்தார்.  

அதேபோல, தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் மணல் திட்டுக்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றது. அடிக்கடி மணல் திட்டுக்களை அகற்ற ஏதுவாக மணல் அள்ளும் எந்திரம் (Dredging Machine) ஒன்று நிரந்தரமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருக்கும்படி ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மணல் அள்ளும் எந்திரம் (Dredging Machine) தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், இரையுமன்துறை மீனவ கிராமத்தை கடலரிப்பிலிருந்து நிரந்தரமாக  பாதுகாப்பதற்காக தொடர் தூண்டில் வளைவுகள் அமைக்க 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டு –க்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை துரிதப்படுத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதியளித்தார்.மேலும் IREL நிறுவனம் மீனவ கிராமங்களில் கனிம மணல் எடுப்பதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

 

Tags :

Share via