இலவச பாஸ் வதந்தியால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்

by Editor / 05-06-2025 01:08:54pm
இலவச பாஸ் வதந்தியால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்

18-வது IPL கிரிக்கெட் தொடரில் RCB அணி சாம்பியன் கோப்பையை வென்றதை தொடர்ந்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கான இலவச பாஸ் ஆன்லைனில் பெறலாம் என வதந்தி பரவியது. இதனால் லட்சக்கணக்கானோர் பாஸ் பதிவிறக்கம் செய்து மைதானத்தில் திரண்டனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via