ஒ.பி.எஸ்டன் ஒருபோதும் இணைய முடியாது-எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிக்கும் ஒ.பன்னீர் செல்வத்திற்கும்இடையேயான பிரிவு மோதல் இணைப்பு என்கிற பேச்சிற்கே இடமில்லாது செய்து கொணடிருக்கின்றது. நீதிமன்றத்திற்கு செல்லும் வழக்குகளால் ஒருவர் மாறி ஒருவர் பலம் பெறுவதும் சட்டென்று மற்றொருவர் பலகீனமாகி போவதும் நடந்து கொண்டிருக்கின்றது. ஜீலை 11இல் நடந்த பொழுவிற்கு பின் எடப்பாடியின் கை ஒங்கி யிருக்க, ஒ.பி.எஸ், வைர முத்து தொடர்ந்த மேல் முறை வழக்கில் இரண்டு பொதுக்குழு செல்லாதென்றும் எடப்பாடியின் இடைக்கால பொதுச்செயலளார் பதவி செல்லாதென்றும் தீர்வு வந்தது. இப்பொழுது ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர் .இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மெளனம் காத்து வருகின்றன்ர் . .முன்னாள் அமைச்சர் ஜெ யக்குமார் தான்கருத்துக்களைக் கூறி வருகிறார் .ஒ.பி.எஸ் ஒரு மகா நடிகர் என்றும் ரஜினி,சிவாஜியை மிஞ்சிவிடக்கூடிய ஆஸ்கார் வாங்குமளவுக்கு ந டிக்கக்கூடியவர் என்று. நடிகர் பாக்கிய ராஜ் இணைப்பி ற்கு நானே எடப்பாடியைச்சந்திப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் ,எடப்பாடியோ இணைய வாய்ப்பில்லை என்று சொல்லியதோடு தனித்து நின்றவரை அழைத்து உயர்ந்த பதவி கொடுத்தோம் நன்றியில்லாதவா் என்கிற தொனியிலும் ரவுடிகளை வைத்துக் கட்சி அலுவலகத்தை சூறையாடியவர்.. அவரோடு எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்கிற கருத்தை முன் வைத்து இணைப்பிற்கு சாத்தியமில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விட்டார் .ஆனால் ,1.5 கோடி கட்சி தொண்டர்கள் யார் பக்கம் போவது என்றுதெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்
Tags :