நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பீகாரில் பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலைக்குள் மீண்டும் அவர் தலைமையில் புதிய அரசு பதவியேற்கவுள்ளது. ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து ஆட்சியமைக்கிறார். இந்த நிலையில், நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்ததற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அரசில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தொடர்வார். பாஜகவுக்கு 2 துணை முதலமைச்சர்கள் பதவி வழங்கப்படவுள்ளது.
Tags :