விநாயகருக்காக பிரத்யேக ஆதார் அட்டை பந்தல்
ஜாம்ஷெட்பூரில் விநாயகருக்காக பிரத்யேக ஆதார் அட்டை பந்தல் உருவாக்கப்பட்டது, பலரையும் கவர்ந்துள்ளது அந்த ஆதார் அட்டையில் அவர் பிறந்த தேதி ஆறாம் நுாற்றாண்டு என்றும், அவருடைய தந்தையின் பெயர் மகாதேவ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், விநாயகரின் முகவரியாக கைலாச மலை, மேல்தளம், மானசரோவர் ஏரி, பின்கோடு - 000 001 என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பலர் இந்த பந்தலை பார்த்து ரசிப்பதுடன், அதன் அருகே நின்று 'செல்பி' எடுத்து செல்கின்றனர்.
Tags :