குடியரசு தின விழாவிற்கு தலைமை விருந்தினர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
2024, குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார். இதனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி புதன்கிழமை தெரிவித்தார். இம்மாதம் 8ஆம் தேதி, ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, பிடனை அழைத்ததாக பிரதமர் தெரிவித்தார். மோடியின் அழைப்பை பிடன் ஏற்றுக்கொண்டால், குடியரசு தின விழாவில் விருந்தினராக வரும் இரண்டாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பிடன் பெறுவார்.
Tags :