குளிரில் நடுங்கும் வட மாநில மக்கள்
நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரிக்கு கீழே பதிவாகியுள்ளது. பல வட மாநிலங்களில் 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதே போல், தமிழகத்தின் பல மாவட்டங்களில், காலை, மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் கடும் குளிர் காரணமாக அவதிக்கு ஆளாகியுள்ளனர். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவுகிறது.
Tags :