திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ஜெயராமன்
மழை வெள்ள சேதாரத்தை தவிர்க்க திமுக அரசு மேற்கொண்ட ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியறுத்தியுள்ளார். இதுகுறித்து, பேசிய அவர், "சென்னையில் தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 2015-ல் பெய்த கனமழையின்போது, இந்தளவுக்கு தண்ணீர் தேக்கம் அடையவில்லை. திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.
Tags :